அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி


அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி
x
தினத்தந்தி 9 Sep 2020 10:12 AM GMT (Updated: 9 Sep 2020 10:12 AM GMT)

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

திமுக பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

உள்ளம் கவர்ந்த தம்பி என்று ராஜாவை கருணாநிதி பாராட்டியுள்ளார்.  வரும் 15ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெறும்.  மூத்த நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கும் விழா அது.

மிக எளிமையாக முப்பெரும் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.  5 மாதம் கொரோனாவால் கழிந்து விட்டது இனி நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். நாம் தான் ஆட்சிக்கு வர போகிறோம். 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கி வந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைதொடர்ந்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்.

Next Story