நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 13 Sep 2020 9:10 AM GMT (Updated: 13 Sep 2020 9:10 AM GMT)

நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடம் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story