கொளத்தூரில் ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு திட்டம்’: மு.க.ஸ்டாலின் 4-ம் கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கினார்


கொளத்தூரில் ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு திட்டம்’: மு.க.ஸ்டாலின் 4-ம் கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:45 PM GMT (Updated: 13 Sep 2020 9:32 PM GMT)

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின்படி, கடந்த ஜூலை 18-ந்தேதி ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.

சென்னை, 

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின்படி, கடந்த ஜூலை 18-ந்தேதி ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதையொட்டி, சமையல் கலைஞர்களிடம் ரூ.10 லட்சத்தை முதற்கட்டமாக அவர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது கட்டங்களாக முறையே கடந்த 3, 26-ந்தேதிகளில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் 4-வது கட்டமாக ரூ.10 லட்சத்தை சமையல் கலைஞர் துர்கா பிரசாத்திடம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள மக்களின் பசியை போக்கும் இத்திட்டத்துக்கான முழு செலவுகளையும் மு.க.ஸ்டாலின் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின்போது சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story