செப்டம்பர் 14: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்


செப்டம்பர் 14: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 14 Sep 2020 1:46 PM GMT (Updated: 14 Sep 2020 1:46 PM GMT)

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,53,165 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,799 பேர் குணமடைந்து உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 46,912 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் தற்போது கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,393 ஆக உள்ளது. கொரோனாவால் இன்று மட்டும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 8,434 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,49,583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78,190 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 59,68,209 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 80,123 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் - 170 (65 அரசு + 105 தனியார்) 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:-











Next Story