நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை - முதல்வர் பழனிசாமி + "||" + Nivar storm:tomorrow Government holiday in TamilNadu - Chief Minister Palanisamy
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை - முதல்வர் பழனிசாமி
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை , அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை
நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை,அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் . நிவர் புயல் எதிரொலி : நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் . புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது.
மக்களுக்காக அரசு இருக்கிறது. எதிர்கட்சிகள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள். நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படுவது குறித்து அரசு முடிவு செய்யும். புயல் கரையை கடக்கும்போது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்எனத் தெரிவித்தார். மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என கூறினார்.
தமிழகம், புதுச்சேரியில் நிவர் புயல், மழை ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று வருகின்றனர். 4 நாட்கள் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
ஏரிகள் உள்பட நீர்நிலைகள் நீர் நிறைந்து காணப்படுவதால் அருவிகள், நீர்வீழ்ச்சிகள் என அனைத்திலுமே ஆர்ப்பரித்து மேல் செல்கிறது. சென்னை செங்குன்றத்தை அடுத்த பம்மது குளத்தில் படித்துறையில் பாய்ந்து ஓடும் நீரில் விளையாடி மகிழும் சிறுவர் சிறுமிகளை படத்தில் காணலாம்
நிவர் புயலால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறையையொட்டி, சென்னையில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாலைகளும் வெறிச்சோடின. இந்த காட்சிகள் அனைத்துமே ஊரடங்கை மீண்டும் நினைவுபடுத்துவது போல அமைந்தன.