தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு


தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2021 7:21 AM GMT (Updated: 20 Jun 2021 8:23 AM GMT)

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்ததாக ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம் என்பது பற்றி மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா என்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாக இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு( நாளை முதல் 28 -ந்தேதி வரை) ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மூன்று வகையாக மாவட்டங்கள் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதில் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை  செயல்படலாம் என்றும் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story