கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு


கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 2 July 2021 10:24 AM GMT (Updated: 2 July 2021 10:24 AM GMT)

கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொந்தகை,

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணி நடபெற்று வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது மனித முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த முழு உருவ எலும்புக்கூடு சுமார் 4 அடி நீளம் இருக்கும். இந்த முழு உருவ எலும்புக்கூடு முழுமையான ஆய்வுக்கு பிறகு தான் ஆணா -பெண்ணா எனவும் மேலும் எந்த நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது எனவும் தெரியவரும்.

இந்நிலையில், கொந்தகையில், இன்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே முழு நீள அளவிலான மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3-வதாக கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டை தோண்டி எடுக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த எலும்புக்கூடு எந்த நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என ஆய்வுக்கு பின்னர் தெரியவரும் தெரிவித்தனர். கொந்தகையில், இதுவரை 13 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Next Story