எழுத்தாளர் எஸ்.பால பாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு


எழுத்தாளர் எஸ்.பால பாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 2:57 PM GMT (Updated: 3 Sep 2021 2:57 PM GMT)

2020 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் எஸ்.பால பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.

2020-ம் ஆண்டுக்கான  பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன.  எழுத்தாளர் எஸ்.பால பாரதியின் ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமியின் ’பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story