உ.பி. வன்முறை: கமல்ஹாசன் கண்டனம்


உ.பி. வன்முறை: கமல்ஹாசன் கண்டனம்
x
தினத்தந்தி 4 Oct 2021 10:17 AM GMT (Updated: 4 Oct 2021 10:17 AM GMT)

உ.பி. நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள்,விவசாயிகள் பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் வன்முறை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“ உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை.  அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உ.பி. அரசின் மூர்க்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story