அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார்


அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார்
x
தினத்தந்தி 4 Oct 2021 9:38 PM GMT (Updated: 4 Oct 2021 10:13 PM GMT)

சென்னை அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது.


சென்னை,

சென்னை அண்ணா பல்கலை கழகம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனம்.  ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தியது முதல், இதுவரை வரி செலுத்தாமல் ஏய்ப்பில் ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறும்போது, அண்ணா பல்கலை கழக தேர்வு மையம், உறுப்பு கல்லுாரி சேவை மையம், ஆராய்ச்சி மையம் என 40க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகின்றன.

இந்த பல்கலையின் கீழ், ஏராளமான என்ஜினியரிங் உறுப்பு கல்லுாரிகளும் இயங்குகின்றன.  உறுப்பு கல்லுாரிகளுக்கு, பல்கலை வழங்கும் சேவைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் செலுத்த வேண்டும்.

கல்லுாரிகளிடமிருந்து பெறும் வரியை, அரசுக்கு அண்ணா பல்கலை செலுத்த வேண்டும்.  ஆனால், அண்ணா பல்கலை பொது ஜி.எஸ்.டி. பதிவு எண் என இதுவரை ஏதும் பெறாமல், நோட்டுகளில் கணக்கு விபரங்களை பராமரித்து வருகிறது.

இதன்படி, கல்லுாரிகளிடம் வசூலித்த 100 கோடி ரூபாய்க்கு 16 கோடி ரூபாய் வரை, ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். ஆனால், இதுவரை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளது. இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக, ஜி.எஸ்.டி. அதிகாரிகள ஆய்வு செய்து சென்று உள்ளனர் என கூறப்படுகிறது.  இதனால், வரி ஏய்ப்புக்கு நிகரான அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story