நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறப்பது எப்போது? அன்பில் மகேஷ் தகவல்


நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறப்பது எப்போது? அன்பில் மகேஷ் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2021 9:01 AM GMT (Updated: 16 Oct 2021 9:02 AM GMT)

நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து நேற்று தமிழக உத்தரவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது. பாகுபாடு காட்டக் கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 நர்சரி பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. மேலும், முதல்-அமைச்சர் ஆலோசனையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தான் விவாதித்தோம்.  நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

Next Story