பவர் பேங்க் செயலி: பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு


பவர் பேங்க் செயலி:  பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் -  சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 11:11 PM IST (Updated: 15 Nov 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

பவர் பேங்க் செயலி தொடர்பாக முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

பவர் பேங்க் முதலீடு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பி நூற்றுக் கணக்கானோர் பவர் பேங்க் முதலீடு செயலியில் தங்கள் பணத்தை முதலீடு செய்து மோசடி கும்பலின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்ராய்டு செல்போன்களில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்யப்படும் பவர் பேங்க் முதலீடு செயலி மூலம் மோசடி கும்பல் நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

பாதிப்பிற்குள்ளான நூற்றுக்கணக்கானோர் பணத்தை இழந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் அளித்து வந்த நிலையில்,  பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும், இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிக்கவும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை அணுக ஏதுவாக 9444128512 என்ற தொலைபேசி எண்ணையும்,  cbcyber@nic.in  என்ற மின்னஞ்சல் முகவரியையும், நேரில் சந்தித்து பேச ஏதுவாக காவல் ஆய்வாளர், சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவு, எண் 220, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற விசாரணை அதிகாரியின் முகவரியையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
1 More update

Next Story