தமிழ்நாட்டில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழ்நாட்டில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 2 Dec 2021 1:58 PM GMT (Updated: 2 Dec 2021 1:58 PM GMT)

தமிழ்நாட்டில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 28 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 748 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 83 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா தாக்குதலுக்கு இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது.

Next Story