க.அன்பழகனின் உருவ சிலையை திறந்து வைத்தார் -முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்


க.அன்பழகனின் உருவ சிலையை திறந்து வைத்தார் -முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Dec 2021 4:57 AM GMT (Updated: 19 Dec 2021 4:57 AM GMT)

சென்னை நந்தனத்தில் க.அன்பழகனின் உருவ சிலையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை 

பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில்  க.அன்பழகனின் உருவ சிலையை  முதல் -அமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை  நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக  கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை அவர் இன்று திறந்து வைத்தார் ,

மேலும் கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசு சிறுசேமிப்பு துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டப்பட்டது.
 

Next Story