தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37 ஆக குறைந்தது


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37 ஆக குறைந்தது
x
தினத்தந்தி 25 March 2022 1:37 PM GMT (Updated: 25 March 2022 1:50 PM GMT)

புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை, 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் 66  பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,141  ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது  446   பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக  11  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது 

 தமிழகத்தில் இன்று கொரோனாவால்  உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story