மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு...!


மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு...!
x
தினத்தந்தி 10 April 2022 11:48 AM GMT (Updated: 10 April 2022 11:48 AM GMT)

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.

மதுரை,

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 16-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

சித்திரை திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் 16ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீரை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்றும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story