9-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி


9-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 19 April 2022 11:23 PM GMT (Updated: 19 April 2022 11:23 PM GMT)

‘தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை,

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனை படைத்து முத்திரை பதித்தவர் ‘தினத்தந்தி' அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அங்குள்ள நினைவு பீடத்தில் ‘தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள், மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், சம்யுக்தா ஆதித்தன், சேகர் ராமச்சந்திரன், சுஜாதா ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து ‘தினத்தந்தி', ‘டி.டி.நெக்ஸ்ட்', மாலை மலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், நினைவு பீடத்தில் அஞ்சலி செலுத்தியவர்களின் விவரம் வருமாறு:-

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அவருடைய கணவர் டாக்டர் சவுந்தரராஜனுடன் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பா.ஜ.க., காங்கிரஸ்

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, துணைத்தலைவர் எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம், வக்கீல் அணி மாநில தலைவர் பால்கனகராஜ், செயற்குழு உறுப்பினர் யமஹா கணேஷ், தமிழக பா.ஜ.க. செயற்குழு சிறப்பு அழைப்பாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., விஜய்வசந்த் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமராஜ்.

தி.மு.க., அ.தி.மு.க.

தி.மு.க. சார்பில் வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் விஜயராஜ், தென்சென்னை மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஏ.எஸ்.மகேந்திரன், மார்க்கெட் சிவா மற்றும் தி.மு.க. பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், தளபதி பேரவை மாநில தலைவர் அருள்காந்த்.

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, இலக்கிய அணி துணைச்செயலாளர் இ.சி.சேகர், அம்மா பேரவை பகுதி செயலாளர் முகப்பேர் எம்.என்.இளஞ்செழியன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ்.வேல் ஆதித்தன்.

ம.தி.மு.க., பா.ம.க.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தேர்தல் பணி துணைச்செயலாளர் ஆர்.ராமதாஸ், மாவட்ட பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி, மாவட்ட துணைச்செயலாளர் வைகோ மைக்கேல்ராஜ், தென்சென்னை கிழக்கு மாவட்ட சேப்பாக்கம் பகுதி செயலாளர் எல்.எஸ்.ஆர்.கார்த்திக். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாவட்ட தலைவர்கள் ஜமுனா கேசவன், ஸ்ரீராம் அய்யர், பகுதி தலைவர் முரளி. தே.மு.தி.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், செயற்குழு உறுப்பினர் டி.சிவபாலன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், வி.சி.க. மத்திய சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், நா.செல்லத்துரை, வட்ட செயலாளர்கள் பகவான்தாஸ், மாவட்ட பொறுப்பாளர் சந்திரசேகர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சமத்துவ மக்கள் கட்சி சென்னை மண்டல அமைப்பு செயலாளர் டி.மகாலிங்கம், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மணலி எம்.பாலா. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில வர்த்தகர் அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்.

புகைப்படத்துடன் கூடிய கவிதை

சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், காந்தி மக்கள் கட்சி தலைவர் ஜி.பி.எஸ்.கார்த்திக், தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் து.வெ.வேணுகோபால், பனங்காட்டு படை கட்சி மண்டல தலைவர் ஜெ.டி.எஸ்.சிங் நாடார், நிர்வாகிகள் ராவணன் ராமசாமி, அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சுரேஷ்மாறன், ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார். இந்து முன்னணி அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன், சென்னை மாநகர பொது செயலாளர் மேகநாதன், செயலாளர் சிவ விஜயன்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்ததோடு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் புகைப்படத்துடன் கூடிய கவிதையை, தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனிடம் வழங்கினார். இதேபோல், சிலர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் புகைப்படத்தை கொண்டுவந்து அஞ்சலி செலுத்தினர்.

நாடார் சங்கம்

சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி செயலாளரும், தாளாளருமான டி.ராஜகுமார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், துணைத்தலைவர்கள் ஆர்.காமராஜ், தங்கத்துரை, இளைஞர் அணி தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் கிறிஸ்டோபர், செயலாளர் எட்டுராஜா, சென்னைவாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம், தண்டுபத்து ஜெயராமன், நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் சென்னை கிளை தலைவர் செல்வராஜ் நாடார், செயலாளர் ராஜேந்திரன், இயக்குனர்கள் அன்புசெழியன் நாடார், ஆறுமுக பாண்டியன்.

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர்கள் மயிலை சந்திரசேகர், கொட்டிவாக்கம் முருகன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், சென்னைவாழ் நாடார் சங்க செயலாளர் செல்லதுரை, இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனர் ராகம் சவுந்தரபாண்டியன், அகில இந்திய நாடார் மகாஜன சபை மாநில தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன் நாடார், மணலி நாடார் உறவின்முறை இலவச மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி எம்.சமுத்திரபாண்டியன், சென்னை வட்டார கே.புதூர் நாடார் சங்க துணைத்தலைவர் கே.காளியப்பன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம்.சீனிவாசன் நாடார், ஷத்திரிய பாசறை நிறுவனர் ஆர்.ஜி.சம்பத்குமார், பொருளாளர் ஆர்.வேல்முருகன், செயலாளார் பத்மநாபன், கோடம்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் உபதலைவர் ராமராஜ், காப்பாளர் சுரேஷ், மத்திய சென்னை நாடார் இளைஞர் பேரவை தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் ஜான்சன்.

தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் ஏ.கார்த்திகேயன், சென்னை-சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் ஜெயசங்கர், செயலாளர் பா.பொன்சேகர், பொருளாளர் பி.முருகன், பாண்டிய நாடு நாடார் பேரவை தலைவர் பொன் கருக்குவேல்ராஜன், நெற்குன்றம் நாடார் சங்க தலைவர் முத்துராமன், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், துணைச்செயலாளர்கள் பத்ம பத்ரா, ஜார்ஜ் மில்லர், லயன் செல்வன், நீலாங்கரை நாடார் சங்க செயலாளர் ரகுபதிராஜா, அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் வி.கே.சி.எம்.செல்வராஜ் நாடார், வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ஜி.ராபர்ட், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், பொருளாளர் ஜி.மெல்வின், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் உதயகுமார், திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்கத்தின் தலைவர் கே.சி.ராஜா, திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் தலைவர் எஸ்.சுந்தர் நாடார், செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் நாடார், பொருளாளர் சி.சின்னத்துரை நாடார், ஆலந்தூர் வட்டார நாடார் சங்கத்தின் தலைவர் பி.கணேசன், சென்னை கள்ளிகுளம் நாடார் சங்க தலைவர் என்.ஏ.தங்கதுரை, வண்ணாரப்பேட்டை நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.பி.ராஜன், நாடார் சங்க துணை செயலாளர் சேலம் மாடசாமி.

நற்பணி மன்றம்

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீஷ் சவுந்தர்முருகன், பொருளாளர் எம்.நசீர் அகமது, துணைச்செயலாளர் பால முனியப்பன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், காயல் ஆர்.எஸ்.இளவரசு, ஏ.கணேசா, தென்சென்னை மாவட்ட நிர்வாகி அந்தோணி ஊதான்ஸ், ஏ.மரியபிரான்சிஸ் சேவியர், அமுதன் வளர்மதி, மணலி சேக்காடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயலாளார் பாண்டியன், பொருளாளர் ஹரிஹரன், திருவொற்றியூர் நகர டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் டி.முல்லைராஜா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் நற்பணி ஜி.நாகராஜன், திருத்தணி நகர தலைவர் எம்.கே.ராமச்சந்திரன், திருத்தணி பாலாஜி, அயன்புரம் கிளை தலைவர் ஜெகதீஷ், நிர்வாகிகள் சந்திரசேகர், விஸ்வநாதன், சத்திதானந்தம், எஸ்.பி.பாலமுருகன், புகழரசன், சதீஷ், அருண்குமார் பாண்டியன், மிதிலேஷ், திருச்சி மாவட்டம் அணியாப்பூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அமைப்பாளர் எம்.ராஜகோபால், நிர்வாகிகள் செல்வம், காமராஜ், எம்.குருசாமி, ஏ.தங்கவேல், கிருஷ்ணமூர்த்தி, காட்டுப்பாக்கம் மன்ற செயலாளர் எம்.விஜயகுமார், செனாய்நகர் மன்ற தலைவர் பி.கே.சீனிவாசன்.

வணிகர் சங்கம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை தலைவர் சவுந்தரராஜன், மணலி சேக்காடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் என்.மாரிமுத்து, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துக்குமார், பொது வியாபாரிகள் சங்க நிறுவனர் ஏ.தங்கம், சர்வதேச வணிகர்கள் சம்மேளன தலைவர் கராத்தே சந்துரு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி.

இசை முழங்க மாணவிகள் அஞ்சலி

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் இந்திய கைப்பந்து கழக செயலாளர் கே.முருகன், இந்திய கைப்பந்து சம்மேளனம் பீச் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் எம்.பிரபாகரன், மணலி புதுநகர் அய்யாகோவில் நிர்வாக தலைவர் பி.துரைபழம் நாடார், துணைத்தலைவர் ஐவன்ஸ், அன்னை குழுமம் ரவீந்திரன், ம.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் மாதவி பாஸ்கரன், தலைவர் டாக்டர் செந்தில் ம.பொ.சி., கிராமணி இயக்க துணைத்தலைவர் கார்த்தி பாஸ்கரன், அண்ணா எம்.ஜி.ஆர். மக்கள் கழக நிறுவனத்தலைவர் முத்துராமன் சிங்கப்பெருமாள், அவைத்தலைவர் கந்தன் முனுசாமி, பொதுச்செயலாளர் சங்கர் கணேஷ், சென்னை மன்ற நிர்வாகி ஜஸ்டின், அம்பை 16 மக்கள் இயக்க தலைவர் சத்ரியன் ராஜா, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழகம் தலைவர் என்.மாரிமுத்து, டபுள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியன் விளையாட்டுக்குழு தலைவர் செல்வராஜசோழன், சென்னை ரைபிள் கிளப்பை சேர்ந்த கடலூர் ஜெ.சத்தியநாராயணன், மணலி விநாயகா குரூப்ஸ் கே.தமிழ்ச்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பார்வதிமுத்து, அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் மேக பேச்சுராஜா நாடார், திருவொற்றியூர் தாய்-தந்தை சேவை மையத்தின் துணை செயலாளர் பிரைட்டன், கோயம்பேடு கல்வி கண் திறந்த காமராஜர் நற்பணி இயக்கத்தின் நிறுவனர் ரஸ்னா ராமச்சந்திரன், அகில இந்திய காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் மணியரசர், பொதுச்செயலாளர் மிக்கேல் கே.ராஜா, நடிகர் ராணவ், இயக்குனர் தமீஸ், எழுத்தாளர் இலா, ஆர்த்தி, தயாரிப்பாளர் பி.சி.அன்பழகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க பொது செயலாளர் மார்ட்டின் சுதாகர், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், காமராஜர் ஆதித்தனார் கழக சென்னை மண்டல தலைவர் இரா.பால்பாண்டியன், கராத்தே செல்வின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் நெல்லை ஜான்சன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் எஸ்.வி.சேகர், நிலதரகர்கள் சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், திருவேற்காடு கருமாரி அம்மன்கோவில் மேலாளர் அண்ணாமலை, நடிகர் இமான் அண்ணாச்சி.






சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் தாளாளர் கே.சந்திரசேகர் தலைமையில் தலைமை ஆசிரியை ஜெகஜோதி, ஆசிரியைகள், மாணவிகள் இசை வாத்தியம் முழங்க டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story