திருச்சி: விபத்தில் காயமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு..!


திருச்சி: விபத்தில் காயமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 2 May 2022 1:17 PM GMT (Updated: 2 May 2022 1:17 PM GMT)

மணப்பாறை அருகே விபத்தில் காயமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள எசன கோரை பகுதியை சேர்ந்தவர் மந்திரி குமார் (வயது 53). இவர் வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் கடந்த 29 ம் தேதி பணிக்கு செல்வதற்காக ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மரவனூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மொபட் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மந்திரி குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தில் மந்திரி குமார் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மந்திரி குமார் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

Next Story