கடையின் பூட்டை உடைத்து திருட்டு; ராஜநடை போட்டு தப்பி சென்ற திருடன்..!


கடையின் பூட்டை உடைத்து திருட்டு; ராஜநடை போட்டு தப்பி சென்ற திருடன்..!
x
தினத்தந்தி 9 May 2022 12:58 PM GMT (Updated: 9 May 2022 12:58 PM GMT)

மேலூரில் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடித்த திருடனை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டம், மேலூர் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 45). இவர் அரசு கல்லூரி அருகே திருச்சிரோட்டில் வீட்டு கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் டிரேடர்ஸ் கடை வைத்துள்ளார். 

இவரது கடையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சட்டை அணியாமல் வந்த திருடன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 9 ஆயிரம் மதிக்கதக்க சிறிய கட்டுமான பொருட்களையும் கள்ளாபெட்டியில் இருந்த கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 4,500 ரூபாய் ரொக்கப்பணத்தையும் திருடியுள்ளான். 

பின்னர் பணம் வைக்கப்பட்டிருந்த அந்த கைப்பையை தலையில் மாட்டுக்கொண்டு மேஜையில் இருந்த நீண்ட கைத்தடியை கையில் பிடித்துக்கொண்டு ராஜாவாக தன்னை பாவித்து ராஜநடை போட்டு முன்பக்க கதவை அப்படியே திறந்து வைத்துவிட்டு சர்வசாதாரணமாக தப்பித்து சென்றுவிட்டான். 

இவை அனைத்தும் கடையினுள் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தப்பி சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story