சிதம்பரம் நடராஜர் கோவில் முறைகேடு: விசாரணை நடத்த அனுமதி மறுப்பு - அமைச்சர் சேகர்பாபு


சிதம்பரம் நடராஜர் கோவில் முறைகேடு: விசாரணை நடத்த அனுமதி மறுப்பு - அமைச்சர் சேகர்பாபு
x

சிதம்பரம் நடராஜர் கோவில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சென்னை, ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆய்வுக்குபின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிதம்பரம் நடராஜர் கோவில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தலைமையிலான குழு விசாரணை நடத்த சென்றபோது தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. 

இம்மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி மறுத்தவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பயம் காரணமாக பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக திமுக அரசு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story