திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்...!

தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது வருகின்றனது.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாய ஐயாறப்பர் கோவில் சப்த ஸ்தான உற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாட்கள் நடக்கிறது.
இன்று 9-ஆம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நடைபெற்று வருகின்றது. ஐயாறப்பர் மற்றும், அறம் வளர்த்த நாயகி அம்மன் தனித்தனி பெரிய தேர்களிலும், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சிறிய தேர்களிலும் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளிலும் வீதி உலா வந்து மாலை 6 மணியளவில் கீழவீதி தேர்நிலையை அடைந்ததும் ஆராதனைகள் நடக்கிறது.
ஐயாறப்பர் தேர்வடம் பிடிக்க கல்யாணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து அருளாசி பெறுவது குறிப்பிடத் தக்கது.
Related Tags :
Next Story