ஈரோடு: பணத்தை திருப்பிக் கேட்ட முதியவருக்கு கத்திக்குத்து - மகன் கைது...!

ஈரோடு அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட முதியவரை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கேசரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 70). இவரது மனைவி இருசாயி(60) இவர்களது மகன் மாது என்கிற மாதப்பன் (40). தந்தை முத்து மகனுக்கு ரூ. 2 லட்சம் பணம் கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் தனது மகன் மாதப்பனிடம் தான் கொடுத்த பணத்தை தந்தை திருப்பி கேட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த மாதப்பன் தந்தையை தகாத வார்தையால் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் வாக்குவாதம் முற்றியதால் தந்தை முத்துவை சிறிய கத்தியால் மாதப்பன் குத்தி உள்ளார். இதில் அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
பின்னர் அப்பகுதியினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பவானி போலீசார் மாதப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story