திருவாரூர் தெற்குரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானம் நிறுத்தி வைப்பு - அமைச்சர் நேரு...!


திருவாரூர் தெற்குரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானம் நிறுத்தி வைப்பு - அமைச்சர் நேரு...!
x
தினத்தந்தி 14 May 2022 7:54 AM GMT (Updated: 14 May 2022 7:54 AM GMT)

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் நேரு கூறி உள்ளார்.

திருச்சி,

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பஞ்சப்பூரில் சோதனைச்சாவடியுடன் கூடிய அதி நவீன புறக்காவல் நிலையத்தினை திறந்து வைத்தார். மேலும் திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் நகரில் புதிய நியாய விலைக் கடை கட்டடத்தினை  திறந்து வைத்தும், அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி 53-வது வார்டு பேர்ட்ஸ் ரோடு ஆனைமலை ஷோரூம் அருகில் ரூ. 2.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டும் பணியினைத் தொடங்கி வைத்துள்ளார். 

பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:-

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைக்கூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். 

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப் பாயும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story