மேலும் ஒருவருக்கு கொரோனா

x
தினத்தந்தி 16 May 2022 10:07 PM IST (Updated: 16 May 2022 10:07 PM IST)
புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒருவர் குணமடைந்தார். தற்போது ஏனாமில் 8 பேர், புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர் என 15 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 4 பேரும், 2-வது தவணையை தடுப்பூசியை 8 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 97 ஆயிரத்து 432 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





