மேலும் ஒருவருக்கு கொரோனா


மேலும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 May 2022 4:37 PM GMT (Updated: 16 May 2022 4:37 PM GMT)

புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒருவர் குணமடைந்தார். தற்போது ஏனாமில் 8 பேர், புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர் என 15 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 4 பேரும், 2-வது தவணையை தடுப்பூசியை 8 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 97 ஆயிரத்து 432 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story