951 பெண்கள் உள்பட தமிழகத்தில் 2,269 பேருக்கு கொரோனா


951 பெண்கள் உள்பட தமிழகத்தில் 2,269 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 269 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று புதிதாக 28 ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,318 பேரும், பெண்கள் 951 பேரும் உள்பட 2 ஆயிரத்து 269 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 729 பேர், செங்கல்பட்டில் 378 பேர், திருவள்ளூரில் 159 பேர், கோவையில் 128 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொற்று பதிவாகியுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 104 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 358 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

2,697 பேர் 'டிஸ்சார்ஜ்'

தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 18 ஆயிரத்து 282 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 630 பேரும், செங்கல்பட்டில் 3 ஆயிரத்து 9 பேரும், திருவள்ளூரில் 1,054 பேரும், கோவையில் 859 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 796 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 697 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 52 ஆயிரத்து 216 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story