தமிழகத்தில் 2,312 பேருக்கு கொரோனா; ஆஸ்பத்திரியில் 834 பேர்


தமிழகத்தில் 2,312 பேருக்கு கொரோனா; ஆஸ்பத்திரியில் 834 பேர்
x

தமிழகத்தில் 2,312 பேருக்கு கொரோனா; ஆஸ்பத்திரியில் 834 பேர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,275 ஆண்கள், 1,037 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 618 பேர், செங்கல்பட்டில் 370 பேர், திருவள்ளூரில் 168 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும், தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும், 12 வயதுக்கு உட்பட்ட 96 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 370 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 834 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 8 நாட்களுக்கு பிறகு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 71 வயதான நபர் கொரோனாவுக்கு பலியானார். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 17 ஆயிரத்து 487 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 90 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 817 பேரும், திருவள்ளூரில் 1,022 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story