23,368 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்


23,368 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
x

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 23,368 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 23,368 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இன்று தொடக்கம்

மாவட்டத்தில் 245 உயர்நிலைப்பள்ளிகள் 152 மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 1,722 பள்ளிகள் உள்ளன.

இந்நிலையில் இப்பள்ளிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 529 மாணவர்களும், 1 லட்சத்து 60 ஆயிரத்து 519 மாணவிகளும் என மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 048 பேர் பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் இ்ன்று (திங்கட்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வும், நாளை (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது.

கண்காணிப்பு குழுக்கள்

மாவட்டத்தில் நடப்பாண்டில் 10,985 மாணவர்களும் 12,383 மாணவிகளும் ஆக மொத்தம் 23,368 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

10,240 மாணவர்களும், 11,796 மாணவிகளும் ஆக மொத்தம் 22,036 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வுகளை கண்காணிக்க மாநில அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்ட வாரியாக தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story