தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகள் முடித்து வைப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.

காப்பீட்டு கழக வழக்கறிஞர் சாபுதீன் வாழ்த்தி பேசினார். இதில் அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன், கல்வி கடன் பெற்ற வாராக் கடன் வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.

235 வழக்குகள் முடித்து வைப்பு

மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 1,455 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில் 235 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.3 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 797 இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் முதன்மை சட்ட ஆலோசனை வழக்கறிஞர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story