காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 3 பேர் கைது


காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 3 பேர் கைது
x

காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகில் உள்ள பவித்திரம் கிராமத்தில் காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவண்ணாமலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருவண்ணாமலை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் பவித்திரம் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது பவித்ரம் சமத்துவபுரம் அருகில் சாலையோர சிறு ஓட்டலில் தக்காளி கூடையில் மறைத்து காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்த மணிகண்டன், பிரகாஷ், ரமேஷ் ஆகிய 3 பேரை கையும் களவுமாக பிடித்து வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

மேலும் ஓட்டலில் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story