குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு - தூத்துக்குடி அருகே சோகம்


குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு - தூத்துக்குடி அருகே சோகம்
x

தூத்துக்குடி அருகே உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் உள்ள குளத்தில் உறவினர்களுடன் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story