தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு


தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு
x

தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளது.

தரும்புரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் காளி கவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி நேற்று இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

விளை நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த பாறைக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (50) என்ற விவசாயியை பாலக்கோடு போலீஸார் கைது செய்துள்ளனர்.


Next Story