கோடை மழையால் 3 வீடுகள் சேதம்; 3 கன்றுக்குட்டிகள், 7 கோழிகள் செத்தன


கோடை மழையால் 3 வீடுகள் சேதம்; 3 கன்றுக்குட்டிகள், 7 கோழிகள் செத்தன
x

கோடை மழையால் 3 வீடுகள் சேதம் அடைந்தன. 3 கன்றுக்குட்டிகள், 7 கோழிகள் செத்தன.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. அக்னிநட்சத்திரம் நேற்று முன்தினம் மழையுடன் தொடங்கியது. இந்த கோடை மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-30, பெருங்களூர்-86, புதுக்கோட்டை-12, ஆலங்குடி-5, கந்தர்வகோட்டை-10, மழையூர்-2.60, கீழணை-57.80, திருமயம்-63, அரிமளம்-61.20, அறந்தாங்கி-9.40, ஆயிங்குடி-4, மீமிசல்21.20, ஆவுடையார்கோவில்-8, மணமேல்குடி-11, இலுப்பூர்-8.40, குடுமியான்மலை-15, அன்னவாசல்-4, விராலிமலை-6, உடையாளிப்பட்டி-41, கீரனூர்-19, பொன்னமராவதி-8.20, காரையூர்-30.60. இந்த மழையில் 3 வீடுகள் சேதமடைந்தது. மேலும் 7 கோழிகள், 1 மாடு, 3 கன்றுக்குட்டிகள் செத்தன.


Next Story