மோட்டார் சைக்கிள் மோதல் 3 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதல் 3 பேர் படுகாயம்
x

ஜோலார்பேட்டை அருகே மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் போது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதில் தந்தை குழந்தைகள் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் போது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதில் தந்தை குழந்தைகள் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

திரும்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வி எஸ் வி ரோடு, புதுமனை பகுதியை சேர்ந்தவர் வினோத் பிரபு (வயது41). இவர் நேற்றுமுன்தினம் தனது இரு சக்கர வாகனத்தில் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜோலார்பேட்டை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த உள்ள காவேரிபட்டு பகுதி அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பெருமாள் (34) என்பவர் வினோத் பிரபு ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வினோத் பிரபு மற்றும் இவரது குழந்தைகள் மாதேஷ் (12), மோனிஷ் (9) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்த அவர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து வினோத் பிரபு கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் விபத்து ஏற்படுத்திய பெருமாள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

----

Reporter : KALAISELVI MURALI Location : Vellore - JOLARPET


Next Story