3 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை


3 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்:  தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
x

தேனியில் விதிகனை மீறிய 3 வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தேனி

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில், தொழிலாளர் துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் 24 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 2 நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதிகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 3 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.


Next Story