பெண்ணை தாக்கிய 3 பேர் கைது


பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM GMT (Updated: 14 July 2023 6:45 PM GMT)

நெல்லை அருகே பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆத்தியப்பன் மகன் மாரியப்பன் (வயது 45) கூலி தொழிலாளியான இவரது முதல் மனைவி சுந்தரவள்ளி. திருமணம் முடிந்த 3 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். பின்னர் கண்டியபேரியை சேர்ந்த கருப்பசாமி என்பவரை திருமணம் செய்து கொண்ட சுந்தரவள்ளிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சுந்தரவள்ளி மகளுக்கு திருமணம் ஆகி ஆழ்வார்குறிச்சியில் கணவருடன் வசித்து வருகிறார். கருப்பசாமி தனது மகன்களுடன் கண்டியபேரியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சுந்தரவள்ளி திடீரென தனது முதல் கணவர் மாரியப்பனுடன் கடந்த 3 மாதமாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சுந்தரவள்ளியின் மகன் மற்றும் மருமகன் காளிதாஸ், அவரது உறவினரான தூத்துக்குடி சாஸ்திரி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு கருப்பசாமி (24) ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றவே கருப்பசாமி, காளிதாஸ் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து சுந்தரவள்ளியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுந்தரவள்ளி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.


Related Tags :
Next Story