அண்ணன்-தம்பியை தாக்கிய 3 பேர் கைது


அண்ணன்-தம்பியை தாக்கிய 3 பேர் கைது
x

செய்யாறு அண்ணன்-தம்பியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனசேகர் என்பவரின் மகன்கள் உமாபதி (வயது 27), பொன்னம்பலம் (22). இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கும், தென்கழனி கிராமத்தை சேர்ந்த சரவணன் (25), வெங்கடேசன் (30), சந்தோஷ் (21), வயலூர் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கொஞ்சியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த உமாபதியிடம், அவர்கள் 4 பேரும் தகராறு செய்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அதேபோல உமாபதியின் தம்பி பொன்னம்பலத்தையும் நீலவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பாபு, யுவராஜ், ஜீவா ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உமாபதி, பொன்னம்பலம் மோரணம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமூர்த்தி, சரவணன், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள சந்தோஷ், நீலவண்ணன், பாபு, யுவராஜ், ஜீவா ஆகியோரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story