சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முத்துராஜாபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சேகர்(வயது 42), ஜோதி(47), சரவணன்(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





