கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
திசையன்விளை:
உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உவரி பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக உடன்குடி தேரியூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 19), அதே ஊரைச் சேர்ந்த ராமன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கஞ்சா மொத்த வியாபாரி தேரியூரை சேர்ந்த நயினார் மகன் வாலிபர் குருசாமியை (21) உவரி போலீசார் நேற்று கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





