பணம், செல்போன் திருடிய 3 பேர் கைது

ஆத்தூர் அருகே பூங்கவாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மரவனேரி அருகே நடந்து சென்றார். அவரை அவ்வழியாக வந்த 3 பேர் வழிமறித்து மிரட்டி ரூ.1,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அஸ்தம்பட்டி பாரதிநகரை சேர்ந்த ஹரி என்கிற ஹரிஹரன் (வயது 22), பத்ரி (26), விஜய் ஆனந்த் ஆகிய 3 பேரும் சேர்ந்து நடந்து சென்ற ஆனந்தராஜை மிரட்டி பணம், செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





