மூதாட்டிகள் உள்பட 3 பேர் பலி


மூதாட்டிகள் உள்பட 3 பேர் பலி
x

மூதாட்டிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

திருச்சி


வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.

கார் மோதியது

திருச்சி கருமண்டபம் ஜே.பி.நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 90). இவர் கடந்த 27-ந்தேதி கருமண்டபம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்லம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதியவர் பலி

இதேபோல் முசிறியை அடுத்த காளியாபாலத்தை சேர்ந்தவர் ராமசாமி (80). மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

வையம்பட்டியை அடுத்த லெச்சம்பட்டியை சேர்ந்தவர் சரசு (55). இவர் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்கொத்தனூர் பிரிவு சாலை அருகே நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சரசு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story