குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது
சோமனூர்
கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் சவுடேஸ்வரி காலனி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் விக்னேஷ்(25) மற்றும் கருப்புசாமி என்பவரது மகன் கணேஷ்(25), முருகன் என்பவரது மகன் அம்பேத்கர்(27) ஆகியோர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட சவுடேஸ்வரி காலனியை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





