மது விற்ற 3 பேர் கைது

கைது
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, டி.என்.பாளையம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் மது விற்றதாக டி.என்.பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த ரங்கசாமி (வயது 65), காட்டூரை சேர்ந்த வசந்த் (40), புஞ்சைதுறையம்பாளையம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக திண்டுக்கல் மாவட்டம் நிலகோட்டை பகுதியை சேர்ந்த முனிசெல்வன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 63 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





