மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலாடிப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அதே ஊரை சேர்ந்த தங்கையன் (வயது 55), முருகேசன் (39) ஆகிய 2 பேர் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கந்தர்வகோட்டை-தஞ்சை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மதுபாட்டில்களை விற்றுகொண்டிருந்த முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது அனிபா (57) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story