மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:45 PM GMT)

கடமலைக்குண்டு, பெரியகுளம் பகுதிகளில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

வருசநாடு போலீசார் நேற்று முன்தினம் வாலிப்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முருக்கோடை மூலவைகை ஆற்று பாலம் அருகே நின்று ஒருவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், அதே கிராமத்தை சேர்ந்த பாண்டி (வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், உருட்டிமேடு தடுப்பணை அருகே மதுபானம் விற்ற சீலமுத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் மொத்தம் 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், பெரியகுளம் உழவர் சந்தை அருகே உள்ள பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கோவிந்தராஜ் (வயது 60) என்பவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் கைது செய்தார்.


Related Tags :
Next Story