மதுபானம் விற்ற 3 பேர் கைது


மதுபானம் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2023 7:00 PM GMT (Updated: 6 Feb 2023 7:00 PM GMT)

வேடசந்தூர் பகுதியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூத்தாம்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மதுபானம் விற்ற தேவகவுண்டன்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 37) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் வேடசந்தூர்-கரூர் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன் மதுபானம் விற்ற கன்னிவாடியை சேர்ந்த வேல்ராஜ் (30), வெள்ளையகவுண்டனூரை சேர்ந்த தர்மர் (40) ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story