ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது


ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது
x

நெல்லை அருகே ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாஞ்சாங்குளம் அருகே சந்தேகப்படும்படியாக ஆட்டோவுடன் நின்றுக்கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் (வயது 26), பாஸ்கர் (29), நவநீதகிருஷ்ணன் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆட்டோவுடன் 30 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story