பெண்ணை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு


பெண்ணை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு
x

பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி சாலை தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் (53) குடும்பத்தினருக்கும் இடையே பொது சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் மகாராஜன் மனைவி இசக்கித்தாயை (48), அடைக்கலம், அவரது மனைவி இசக்கித்தாய், உறவினர் சத்யா ஆகிய மூவரும் சேர்ந்து கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அடைக்கலம் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story