மது குடிக்க அனுமதித்த 3 பேர் சிக்கினர்


மது குடிக்க அனுமதித்த 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:46 PM GMT)

போடியில் மது குடிக்க அனுமதித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள பெட்டிக்கடையில் மது குடிக்க அனுமதி அளித்த போடி குலாளர்பாளையம் பகுதியை சேர்ந்த பாண்டி (வயது 65) என்பவரை கைது செய்தனர். இதேபோல் குலாளர்பாளையம், குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள கடைகளில் மது குடிக்க அனுமதி அளித்த சுரேஷ் (46), வீரன் (57) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story