காவிரி ஆற்றில் சிக்கிய பெண் உள்பட 3 பேர் மீட்பு


காவிரி ஆற்றில் சிக்கிய பெண் உள்பட 3 பேர் மீட்பு
x

காவிரி ஆற்றில் சிக்கிய பெண் உள்பட 3 பேர் மீட்கப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம், கடவூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 21). வெள்ளியணை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (20). அதே பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (21). இவர்கள் 3 பேரும் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இந்தாண்டு பட்டப்படிப்பு முடித்து உள்ளனர். இவர்கள் நண்பர்களும் ஆவார்கள். இந்தநிலையில் நேற்று 3 பேரும் மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்று பகுதியின் நடுப்பகுதி சென்று 3 பேரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என அபாய குரல் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காவிரி ஆற்றில் சிக்கிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story