ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 3 பெண்கள் வேட்பு மனு


ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 3 பெண்கள் வேட்பு மனு
x

அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 3 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள அரியலூர் ஒன்றிய ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஆண்டிமடம் ஒன்றிய இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, ஜெயங்கொண்டம் ஒன்றிய கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவி, மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, செந்துறை ஒன்றிய நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவி, தா.பழூர் ஒன்றிய சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, தென்கட்சி பெருமாள்நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, திருமானூர் ஒன்றிய கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவி ஆகிய பதவிகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு பெண்ணும், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பெண்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால் மற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் இன்னும் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும்.


Next Story